ஸர்வேந்த்3ரியகு3ணாபா4ஸம் ஸர்வேன்த்3ரியவிவர்ஜித1ம் |

அஸக்13ம் ஸர்வப்4ருச்1சை1வ நிர்கு3ணம் கு3ணபோ4க்1த்1ரு ச1 ||15||

ஸர்வ--—அனைத்து; இந்த்ரிய--—புலன்கள்; குண--—உணர்வுப் பொருள்கள்; ஆபாஸம்—--உணர்பவர்; ஸர்வ—-அனைத்து; இந்த்ரிய--—புலன்கள்; விவர்ஜிதம்—--இல்லாத; அஸக்தம்--—பற்றற்ற; ஸர்வ-ப்ருத்—--அனைத்தையும் நிலைநிறுத்துபவர்; ச--—இருப்பினும்; ஏவ--—உண்மையில்; நிர்குணம்----—ஜட இயற்கையின் மூன்று முறைகளுக்கு அப்பாற்பட்டது; குண-போக்த்ரி---ஜட இயற்கையின் மூன்று முறைகளை அனுபவிப்பவர்; ச--—இருப்பினும்

అనువాదం

BG 13.15: அவர் அனைத்து புலன் பொருள்களையும் உணர்ந்தாலும், அவர் புலன்கள் இல்லாதவர். அவர் எதனுடனும் பற்றற்றவர், ஆயினும் அவர் அனைத்தையும் பராமரிப்பவர். அவர் குணாதிசயங்கள் இல்லாதவராக இருந்தாலும், ஜட இயற்கையின் மூன்று முறைகளை அனுபவிப்பவராக இருக்கிறார்.

వ్యాఖ్యానం

கடவுளின் புலன்கள் எல்லா இடங்களிலும் உள்ளன என்று கூறிய ஸ்ரீ கிருஷ்ணர், அவருக்கு எந்த புலன்களும் இல்லை என்று நேர் எதிர்மாறாக இப்பொழுது கூறுகிறார். இவ்வுலக தர்க்கத்தின் மூலம் இதைப் புரிந்து கொள்ள முயற்சித்தால், இது முரண்பாடாகக் காணப்படும். நாம் விசாரிப்போம், ‘கடவுளுக்கு எப்படி எல்லையற்ற புலன்கள் மற்றும் புலன்கள் இல்லாமல் இருக்கும்? எனினும், புத்திக்கு அப்பாற்பட்ட அவருக்கு உலக தர்க்கம் பொருந்தாது. கடவுள் அதே நேரத்தில் எல்லையற்ற முரண்பாடான பண்புகளை உடையவர். ப்3ரஹ்ம வைவர்த1 பு1ராணம் கூறுகிறது:

விருத்434ர்மோ ரூபோ1ஸா வைஶ்வர்யாத்1 பு1ருஷோத்11மஹா

‘உன்னதமான இறைவன் எண்ணற்ற முரண்பாடான பண்புகளின் தேக்கமாக இருக்கிறார்.’ இந்த வசனத்தில், கடவுளின் ஆளுமையில் இருக்கும் எல்லையற்ற முரண்பாடான பண்புகளில் சிலவற்றை ஸ்ரீ கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். அவர் நம்மைப் போன்று இவ்வுலக வாழ்க்கைக்குரிய புலன்கள் இல்லாதவர், எனவே அவருக்கு புலன்கள் இல்லை என்று சொல்வது சரிதான். ஸர்வேந்த்3ரிய விவர்ஜித1ம் என்றால் ‘பொருள் உணர்வுகள் இல்லாதவர். 'இருப்பினும், எல்லா இடங்களிலும் உள்ள தெய்வீக உணர்வுகளை அவர் கொண்டிருக்கிறார், எனவே, கடவுளின் உணர்வுகள் எல்லா இடங்களிலும் உள்ளன என்று சொல்வதும் சரியானது. ஸர்வேந்த்3ரிய கு3ணாபா4ஸம் என்றால், 'அவர் புலன்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறார் மற்றும் மேலும் புலன்களின் பொருட்களை புரிந்துகொள்கிறார்.' இந்த இரண்டு குணங்களும் கொண்ட இறைவனின் தன்மை ஶ்வேதா1ஶ்வத1ர உப1நிஷத3த்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

அபா1ணிபா1தோ3 ஜவனோ க்3ரஹீதா11ஶ்யத்1யச1க்ஷுஹு ஸ ஶ்ருணோத்1யக1ர்ணஹ (3.19)

கடவுளுக்கு பொருள் உடல் சார்ந்த கைகள், கால்கள், கண்கள் மற்றும் காதுகள் இல்லை. ஆனாலும் அவர் புரிந்துகொள்கிறார், நடக்கிறார், பார்க்கிறார், கேட்கிறார்.

மேலும், ஸ்ரீ கிருஷ்ணர் படைப்பை நிலைநிறுத்துபவர் என்றும், இன்னும் அதிலிருந்து பிரிந்தவர் என்றும் கூறுகிறார். பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் வடிவத்தில், கடவுள் முழு படைப்பையும் பராமரிக்கிறார். அவர் அனைத்து உயிர்களின் இதயங்களிலும் அமர்ந்து, அவற்றின் செயல்களைக் குறித்து, முடிவுகளைத் தருகிறார். மேலும், விஷ்ணுவின் ஆதிக்கத்தின் கீழ், தேவலோக தெய்வங்கள் நமது உயிர் வாழ்வதற்குத் தேவையான காற்று, பூமி, நீர், மழை மற்றும் பிற கூறுகளை வழங்க ஏற்பாடு செய்கின்றன. எனவே, கடவுள் அனைவரையும் ஆதரிப்பவர். ஆயினும், அவர் தன்னில் முழுமையானவர், இதனால், அனைவரிடமிருந்தும் பிரிந்தவர். வேதங்கள் அவரை ஆத்1மாராம் என்று குறிப்பிடுகின்றன, அதாவது, 'தன்னுள்ளே மகிழ்ச்சியடைபவர், வெளியில் எதுவும் தேவையில்லை'.

பொருள் ஆற்றல் கடவுளுக்கு அடிபணிந்து, அவருக்கு சேவை செய்வதன் மூலம் அவரது மகிழ்ச்சிக்காக வேலை செய்கிறது. இவ்வாறு அவர் மூன்று குணங்களை (பொருள் இயற்கையின் முறைகள்) அனுபவிப்பவர். அதே நேரத்தில், அவர் மூன்று குணங்களுக்கு அப்பாற்பட்டவர் (நிர்கு3ண) ஏனெனில் அவர் தெய்வீகமாக இருக்கும் பொழுது இந்த குணங்கள் தெய்வீகமாக இருக்கும் இந்த குணங்கள் பொருள் சார்ந்தவை.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
13. க்ஷேத்ர க்ஷேத்ரஞ்ஞ விபாக யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency